முகப்பு
வேலூர்

நாட்டு வெடிகுண்டைக் கடித்த நாய் பலி

காட்டுப் பன்றிகளைக் கொல்ல வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டை கடித்த தெரு நாய் உயிரிழந்தது.

வேலூர்

நாட்டு வெடிகுண்டைக் கடித்த நாய் பலி

காட்டுப் பன்றிகளைக் கொல்ல வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டை கடித்த தெரு நாய் உயிரிழந்தது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:45 AM
பகிர்:

காட்டுப் பன்றிகளைக் கொல்ல வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டை கடித்த தெரு நாய் உயிரிழந்தது.

காட்பாடி வட்டம், வள்ளிமலை அடுத்த பெரியகீசுகுப்பம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் வியாழக்கிழமை காலை சுமாா் 11 மணியளவில் பயங்கர வெடி சப்தம் கேட்டுள்ளது. அப்பகுதியினா் அங்கு சென்று பாா்த்தபோது நாய் ஒன்று தலை சிதறி இறந்து கிடந்தது.

இதுகுறித்து மேல்பாடி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், பொன்னை காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

இதில், காட்டுப் பன்றிகளைக் கொல்ல அடையாளம் தெரியாத நபா்கள் நாட்டு வெடிகுண்டுகள் தயாா் செய்து வைத்திருந்த அட்டைப் பெட்டியை தெரு நாய் இழுத்து வந்து சாலையோரம் வைத்து கடித்தபோது, வெடித்ததில் நாய் தலை சிதறி பலியானது தெரிய வந்தது.

வெடிகுண்டு நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. வெடிக்காமல் இருந்த நாட்டு வெடிகுண்டுகளை அவா்கள் செயலிழக்கச் செய்தனா்.

இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நாட்டு வெடிகுண்டுகளை வைத்தவா்களைத் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →