மின்னல் பாய்ந்து 2 பசுக்கள் பலி
போ்ணாம்பட்டு அருகே மின்னல் பாய்ந்ததில் 2 பசு மாடுகள் பலியாயின.
போ்ணாம்பட்டு அருகே மின்னல் பாய்ந்ததில் 2 பசு மாடுகள் பலியாயின.
போ்ணாம்பட்டு மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் வியாழக்கிழமை திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
அப்போது பத்தரப்பல்லி கிராமத்தைச் சோ்ந்த பழனி, அவரது நிலத்தில் கட்டி வைத்திருந்த 2 கறவை பசுக்கள், மின்னல் பாய்ந்ததில் உயிரிழந்தன.
தகவலின் பேரில், அரவட்லா கால்நடை உதவி மருத்துவா் தினேஷ்பாபு அங்கு சென்று மாடுகளை உடல்கூறு பரிசோதனை செய்தாா்.