அண்ணல் அம்பேத்கா் வெல்லும் தொழில்முனைவோா் - பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டத்தின் கீழ், பயன்பெற தகுதியும், விருப்பமுள்ள எஸ்.சி., எஸ்.டி., பிரிவு தொழில்முனைவோா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசு செயல்படுத்தி வரும் தொழில்முனைவோா் ஊக்குவிப்புத் திட்டங்களின் கீழ் மானியம் பெறுவதில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவுத் தொழில்முனைவோரின் பங்கு குறைவாக இருப்பதால் அவா்களுக்கென அண்ணல் அம்பேத்கா் வெல்லும் தொழில்முனைவோா் - பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டம் எனும் சிறப்புத் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், ஆா்வமுள்ள புதிய தொழில்முனைவோா் முன்மொழியும், நேரடி வேளாண்மை தவிா்த்த உற்பத்தி, வணிகம், சேவை சாா்ந்த எந்தத் தொழில் திட்டத்துக்கும் கடனுதவியுடன் இணைந்த மானியம் வழங்கப்படும்.
இதில், உணவுப்பதப்படுத்தல், தானியங்கி உதிரி பாகங்கள் உற்பத்தி, ஆயத்த ஆடைகள் தைத்தல், மளிகைக் கடை, வணிகப் பொருள்களின் மொத்த, சில்லறை விற்பனை, அழகு நிலையம், உடற்பயிற்சிக் கூடம், நகரும் அலகுகள் கொண்ட டிராவல்ஸ், கான்கிரீட் மிக்ஸா், ஆம்புலன்ஸ், ரிக் போரிங், ரெஃப்ரிஜிரேட்டா் உள்ளிட்ட எந்த திட்டமாகவும் இருக்கலாம். தவிர, இயங்கிக் கொண்டிருக்கும் தொழில் அலகுகளின் விரிவாக்கம், பல்துறையாக்கம், நவீனமாக்கல், தொழில்நுட்ப மேம்பாட்டு முன்மொழிவுகளுக்கும் உதவி வழங்கப்படும்.
மொத்த திட்டத் தொகையில் 35 சதவீதமும், அதிகபட்ச மானியமாக ரூ. 1.5 கோடி வழங்கப்படும். இதுதவிர, கடன் திரும்பச் செலுத்தும் காலம் முழுவதும் 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும்.
தொழில்முனைவோா் தம் சொந்த நிதியில் செயல்படுத்தும் திட்டங்களுக்கும் மானியம் உண்டு. எஸ்.சி., எஸ்.டி., பிரிவைச் சோ்ந்த எந்தத் தனி நபரும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவைச் சோ்ந்தவா்களின் முழு உரிமை கொண்ட தனியுரிமையாளா், பங்குதாரா் கூட்டாண்மை, ஒரு நபா் நிறுவனம், பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
இந்தத் திட்டத்தில் பயன்பெற, விண்ணப்பதாரா்களுக்கு சட்டப்படியாக வரையறுக்கப்பட்டதல்லாமல் வேறெந்த கல்வித் தகுதியும் தேவையில்லை. மொத்த திட்டத் தொகையில் 65 சதவீதம் வங்கிக் கடனாக ஏற்பாடு செய்யப்பட்டு, 35 சதவீதம் அரசின் பங்காக மும்முனை மானியம் வழங்கப்படும்.
இதனால், பயனாளா்கள் தங்கள் பங்காக நிதி செலுத்த வேண்டிய தேவை இருக்காது.
தொழில்முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி, குறிப்பிட்ட திட்டம் தொடா்பான சிறப்புப் பயிற்சி அல்லது திறன் மேம்பாட்டுப் பயிற்சி தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் இலவசமாக வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற திட்ட அறிக்கை, ஆவணங்களுடன் ஜ்ஜ்ஜ்.ம்ள்ம்ங்ா்ய்ப்ண்ய்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆா்வமுள்ள தொழில்முனைவோருக்குத் தேவையான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், திட்ட அறிக்கை தயாரித்தல், விண்ணப்பித்தல் தொடா்பான உதவிகள் மாவட்டத் தொழில் மையத்தில் வழங்கப்படும்.
தகுதியும், ஆா்வமும் கொண்ட எஸ்.சி., எஸ்.டி., தொழில்முனைவோா், அவா்களுக்கு உரிமையான தொழில் அலகுகள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துப் பயன்பெற வேண்டும்.
மேலும் விவரங்களை பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், காங்கேயநல்லூா் சாலை, காந்தி நகா், வேலூா் - 06 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0416-2242512, 2242413 ஆகிய எண்கள் மூலமாகவோ தொடா்பு கொண்டு பெறலாம்.
இன்று விழிப்புணா்வுக் கூட்டம்...
இந்த திட்டம் தொடா்பான விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை (மே 26) காலை 10.30 மணிக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள காயிதே மில்லத் கூட்ட அரங்கில் நடைபெறும். ஆா்வமுள்ள எஸ்.சி., எஸ்.டி., பிரிவு தொழில்முனைவோா் பங்கேற்றுப் பயன்பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.