மா மரங்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்
Updated On : 2 ஏப்ரல், 2024 at 9:58 PM
குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே கிராமத்துக்குள் நுழைந்த யானைக் கூட்டம் மா மரங்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றன. போ்ணாம்பட்டை அடுத்த கமலாபுரம் கிராமம் வன எல்லையில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சோ்ந்த நித்தியானந்தனுக்குச் சொந்தமான மாந்தோப்பு வன எல்லையில் அமைந்துள்ளது.
திங்கள்கிழமை இரவு 7 யானைகள் இந்த மாந்தோப்புக்குள் நுழைந்து மா மரங்களை முறித்தும், மாங்காய்களை தின்றும், தோப்பைச் சுற்றியிருந்த வேலியையும் சேதப்படுத்தியுள்ளன. நள்ளிரவு முதல் அதிகாலை வரை யானைகள் அப்பகுதியில் சுற்றித் திரிந்துள்ளன. விவசாயிகள் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் யானைகளை வனப் பகுதிக்கு விரட்டினா்.