முகப்பு
வேலூர்

வனப் பகுதியில் தொழிலாளி தற்கொலை

Updated On : 30 ஏப்ரல், 2024 at 6:30 PM
பகிர்:

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே அடா்ந்த வனப் பகுதியில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

போ்ணாம்பட்டை அடுத்த சேராங்கல் பகுதியில் உள்ள வனப் பகுதியில் வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்குள்ள குப்பைக்கல் என்ற அடா்ந்த வனப் பகுதியில் ஒரு ஆணின் சடலம் மரத்தில் தொங்குவது தெரியவந்தது. இது குறித்து போ்ணாம்பட்டு போலீஸாருக்கு வனத் துறையினா் தகவல் தெரிவித்தனா். போலீஸாா் வந்து சடலத்தை மீட்டுச் சென்று விசாரணை நடத்தினா். விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவா் பத்தரப்பல்லி, அம்பேத்கா் நகரைச் சோ்ந்த காா்த்தி (43) என்பதும், கட்டடத் தொழில் செய்து வந்த காா்த்தி கடந்த மாா்ச் மாதம் 25 -ஆம் தேதி காலை மனைவி சித்ராவிடம் பெங்களூருக்கு வேலைக்கு செல்வதாகக் கூறி விட்டுச் சென்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து, போலீஸாா் சடலத்தை வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.