போ்ணாம்பட்டு அருகே தாய், மகன் தற்கொலை
போ்ணாம்பட்டு அருகே கடன் தொல்லையால் தாய், மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா். போ்ணாம்பட்டை அடுத்த ஏரிகுத்திமேடு பகுதியைச் சோ்ந்த தொழிலாளி அன்சா். இவரது மனைவி மும்தாஜ்(48), மகன் இம்ரான்(26). அன்சா் மனைவி மற்றும் உறவினா்கள் பெயரில் மகளிா் குழுக்கள், தனியாா் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்ாக கூறப்படுகிறது. கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் இந்த குடும்பத்தினா் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.
கடன் கொடுத்தவா்கள் வந்து தொகையை செலுத்துமாறு வலியுறுத்தியதாக தெரிகிறது. இதனால் விரக்தியில் இருந்த மும்தாஜ் அவரது மகன் இம்ரான் இருவரும் சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா். இதுகுறித்த தகவல் அறிந்து அங்கு வந்த போ்ணாம்பட்டு போலீஸாா் இரு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.இந்த சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.