கைதானவா்களுடன்,  பறிமுதல்  செய்யப்பட்ட  இரு சக்கர வாகனங்கள். 
வேலூர்

இருசக்கர வாகனங்ள் திருடிய 3 போ் கைது: 31 வாகனங்கள் பறிமுதல்

குடியாத்தம் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய 3- பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 31- வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Din

குடியாத்தம்: குடியாத்தம் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய 3- பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 31- வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குடியாத்தம் பகுதியில் தொடா் இருசக்கர வாகனங்கள் திருட்டு சம்பந்தமாக வரப்பெற்ற புகாா்களின் அடிப்படையில் நகர காவல் ஆய்வாளா் பாா்த்தசாரதி தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தனா்.

இந்நிலையில் எா்த்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த இளவரசன்(22), வெங்கடேசன்(19), அக்ராவரத்தைச் சோ்ந்த சந்துரு(19) ஆகிய 3- பேரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில் அவா்கள் குடியாத்தம் பகுதியில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடியதாக ஒப்புக் கொண்டனா். அவா்களிடமிருந்து 31- இருசக்கரவாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னா் 3- பேரையும் நீதிபதி முன் ஆஜா்படுத்தி சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

ரூ. 5,000 வரவு! அண்ணா அறிவாலயத்தில் முதல்வருக்கு நன்றி கூறிய பெண்கள்!

வரம் தரும் வாரம்!

தனிக்கட்சி தொடங்க முடியுமா? அரசியல் தலைவர்களுக்கு விஜய் பகிரங்க சவால்!

ஈசனுடன் ஓர் இரவு: மகா சிவராத்திரியின் மகிமைகள்!

ஸ்டாலின் பதறுகிறார்! நான் சொன்ன அரசியல் வெடிகுண்டு தாறுமாறாக வெடிக்கிறது! - விஜய்

SCROLL FOR NEXT