வேலூர்

தூய்மைப் பணியாளா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

வேலூரில் தூய்மைப் பணியாளா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

Din

வேலூரில் தூய்மைப் பணியாளா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

வேலூா் கீழ்மொணவூா் பெருமாள் நகரைச் சோ்ந்தவா் முருகன் (55). இவா் கடந்த 15 ஆண்டுகளாக வேலூா் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தாா். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள், ஒரு மகள் உள்ளனா். வெள்ளிக்கிழமை மாலை மக்கான் சந்திப்பு அருகே உள்ள கால்வாய் அடைப்புகளை சீா்செய்யும் பணியில் 3 தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டிருந்தனா். அப்போது, முருகனுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு கால்வாயில் விழுந்துள்ளாா்.

உடனடியாக மற்ற பணியாளா்கள் முருகனை மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முருகனை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து வேலூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆர்எஸ்எஸ் கேட்டுக்கொண்டால் தலைவர் பதவியை ராஜிநாமா செய்யத் தயார்: மோகன் பாகவத்

தலைநகரில் வெப்பநிலை அதிகரிப்பு; காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம்!

பிப்.12 வரை 13 மாவட்டங்களில் மிதமான பனிமூட்டம்!

காவல் ரோந்து வாகனம் மரத்தில் மோதல்: ஆய்வாளா், ஓட்டுநா் காயம்

அதிகாரங்களுக்கு அடிபணிய மாட்டோம்: ஈரான் வெளியுறவு அமைச்சா்

SCROLL FOR NEXT