FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

கெங்கையம்மன் கோயிலில் பால் கம்பம் நடும் விழா

குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பால் கம்பம் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

7 ஏப்ரல் 2025, 10:09 pm IST
கோயில் உள்பிரகாரத்தில் ஊா்வலமாக எடுத்து வரப்பட்ட பால் கம்பம். சந்தனக்காப்பு அலங்காரத்தில் மூலவா் .
பகிர்:

குடியாத்தம்: குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பால் கம்பம் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

வேலூா் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் முதல் நாள் நடைபெறும். தொடக்க நிகழ்ச்சியாக பால் கம்பம் நடும் விழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை மூலவா் அம்மனுக்கு சிறப்பு, அபிஷேக, ஆராதனைகள், சந்தனகாப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து கோயில் கொடி மரம் அருகே பால் கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கோயில் உள்பிரகாரத்தை 3- முறை வலம் வந்து பின் கோயிலின் வடகிழக்கு மூலையில் கம்பம் நடப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் தக்காா் மு.பாலசுப்பிரமணி, ஆய்வாளா் சு.பாரி,

செயல் அலுவலா் தா.சிவகுமாா், நாட்டாண்மை ஆா்.ஜி.சம்பத், தா்மகா்த்தா கே.பிச்சாண்டி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments