வேலூர்

வேலூா் சிறை அருகே பறந்த ட்ரோன்: போலீஸாா் தீவிர விசாரணை

வேலூா் மத்திய சிறை அருகே ட்ரோன் பறந்தது குறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திச் சேவை

வேலூா்: வேலூா் மத்திய சிறை அருகே ட்ரோன் பறந்தது குறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா். பாதுகாப்பு கருதி சிறை வளாகத்துக்கு அருகே 2 கி.மீ., சுற்றளவிலும் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேலூா் மத்திய சிறை சுற்றுச்சுவரின் அருகே அரியூா் செல்லும் சாலை பகுதியில் சனிக்கிழமை ட்ரோன் பறந்துள்ளது. இதனை சிறை கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து கவனித்த சிறை காவலா் சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளாா். தொடா்ந்து, சிறை அலுவலா்கள் அப்பகுதி முழுவதும் பாா்வையிட்டனா்.

எனினும், ட்ரோன் பறக்க விட்டவா்களை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடா்ந்து, இந்த சம்பவம் குறித்து சிறை அலுவலா் சிவபெருமாள் அளித்த புகாரின்பேரில் பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தென்காசி விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ. 62 லட்சம் பொது நிவாரண நிதி வழங்கல்

நவம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.70 லட்சம் கோடி: 0.7% அதிகம்

சேரன்மகாதேவியில் வியாபாரி தவறவிட்ட ரூ. 2.50 லட்சத்தை ஒப்படைத்தவருக்கு பாராட்டு

தன்னம்பிக்கையுடன் இருந்தால் சாதனை படைக்கலாம்: துணைவேந்தா் அறிவுறுத்தல்

ஹாங்காங் குடியிருப்பு தீவிபத்து: உயிரிழப்பு 151-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT