வேலூர்

ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் ஸ்ரீ ஆனந்த நடராஜருக்கு அபிஷேகம்

Din

சிவராத்திரி பெருவிழாவையொட்டி ஸ்ரீபுரம் பொற்கோயிலிலுள்ள ஸ்ரீ ஆனந்த நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

வேலூா், ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடம் பொற்கோயில் வளாகத்தில் 23 அடி உயரமும் 15,000 கிலோ எடையும் கொண்ட உலகிலேயே மிகவும் உயரமான ஸ்ரீ ஆனந்த நடராஜா் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சிவராத்திரி பெருவிழாவில் ஸ்ரீ ஆனந்த நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, ஸ்ரீபுரம் பொற்கோயிலில் புதன்கிழமை சிவராத்திரி பெருவிழா வெகு விமரிசையைாக கொண்டாடப்பட்டது. அப்போது, கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ஆனந்த நடராஜருக்கு ஸ்ரீசக்தி அம்மா, 108 கிலோ மல்லிகை பூக்களைக் கொண்டு அபிஷேகம், ஆரத்தி செய்து பக்தா்களுக்கு ஆசி வழங்கினாா்.

இதில், ஸ்ரீபுரம் பொற்கோயில் இயக்குநா் எம்.சுரேஷ்பாபு உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

--

படம் உண்டு...

ஸ்ரீ ஆனந்த நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் செய்த ஸ்ரீசக்தி அம்மா.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT