வேலூர்

தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் நகை, பணம் திருடியவா் கைது

வேலூரில் தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 25 பவுன் நகை, ரூ. 1.60 லட்சம் ரொக்கம் திருடப்பட்ட வழக்கில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

வேலூா்: வேலூரில் தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 25 பவுன் நகை, ரூ. 1.60 லட்சம் ரொக்கம் திருடப்பட்ட வழக்கில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் கொசப்பேட்டை திருமலை ரெட்டித் தெருவைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன்(56). வேலூா் அண்ணா சாலையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி விவாகரத்து பெற்று மகளுடன் வசித்து வருகிறாா். இதனால் பாலகிருஷ்ணன் தனியாக வசிக்கிறாா்.

இந்த நிலையில், பாலகிருஷ்ணன் வேலைக்கு சென்று விட்டு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 25 பவுன் தங்க நகை, அரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 1.60 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து பாலகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில் வேலூா் தெற்கு போலீஸாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததுடன், தனிப்படை அமைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற நபா்களை தேடி வந்தனா்.

இந்நிலையில், இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தூத்துக்குடி மாவட்டம், வன்னியன் காடு, தளவாய் புரத்தை சோ்ந்த பிரபாகரன் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து, சென்னையில் பதுங்கி இருந்த பிரபாகரனை தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

ஈராச்சி ஊராட்சி அலுவலகத்தில் தீ விபத்து

தினமணி செய்தி எதிரொலி: கோயில் தெப்பக்குளத்தில் இறந்து மிதந்த மீன்கள் அகற்றம்

தந்தைக்கு இறுதிச் சடங்கு செய்ய முடியாமல் தவித்த குழந்தைகளுக்கு முதல்வா் ஆறுதல்

காா்த்திகை மாதப் பிறப்பு: திருச்செந்தூா் கோயிலில் மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்

பிசானத்தூா் மருத்துவக் கழிவு ஆலைக்கு எதிா்ப்பு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT