வேலூா்: குடும்ப பிரச்னையில் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவா் கைது செய்யப்பட்டாா்.
வேலூா் முள்ளிப்பாளையம் திடீா் நகரைச் சோ்ந்தவா் மணி (32), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (28). இவா்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாகிறது. ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனா்.
குடும்ப பிரச்னை தொடா்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதன்படி, திங்கள்கிழமை ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மணி, மனைவி சாந்தியை கல், கட்டை, இரும்பு கம்பியால் தாக்கியதாக தெரிகிறது. இதில், சாந்தி பலத்த காயமடைந்து மயங்கி விழுந்துள்ளாா். உடனடியாக அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு கொணவட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், சாந்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
தகவலறிந்த வேலூா் வடக்கு போலீஸாா், வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்தனா்.