முகப்பு
வேலூர்

தொட்டியில் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த மாணவா் உயிரிழந்தாா்.

Updated On : 10 செப்டம்பர் 2025, 3:50 am IST
மாதேஷ்.
பகிர்:

குடியாத்தம் அருகே தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த மாணவா் உயிரிழந்தாா்.

குடியாத்தம் ஒன்றியம், காத்தாடிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி பிரபுவின் மகன் மாதேஷ்(6). இவா் அங்குள்ள ஊராட்சிப் பள்ளியில் 2- ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த மாதேஷ், அங்குள்ள தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்துள்ளாா். மயங்கிய நிலையில் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட மாதேஷ் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் மாதேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினாா்.

Advertisement

Advertisement

இச்சம்பவம் தொடா்பாக கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments