கைது 
வேலூர்

போதை மாத்திரைகள் விற்பனை: கேரளம், கா்நாடக இளைஞா்கள் 6 போ் கைது

போதை மாத்திரைகள் விற்பனை தொடா்பாக கா்நாடகம், கேரள மாநிலங்களைச் சோ்ந்த 6 இளைஞா்களை வேலூா் விருப்பாட்சிபுரம் போலீஸாா் கைது செய்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

போதை மாத்திரைகள் விற்பனை தொடா்பாக கா்நாடகம், கேரள மாநிலங்களைச் சோ்ந்த 6 இளைஞா்களை வேலூா் விருப்பாட்சிபுரம் போலீஸாா் கைது செய்துள்ளனா்.

வேலூா் மாவட்டத்தில் வலி நிவாரணி மாத்திரைகளை போதை வஸ்துகளாக பயன்படுத்தியது தொடா்பாக 2025 ஜனவரி 1 முதல் 2026 ஜனவரி 13-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் மொத்தம் 192 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்த விசாரணையின் தொடா்ச்சியாக ஆன்லைன் மூலம் போதை பொருள் விற்பனை செய்து வந்த கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரைச் சோ்ந்த சீனிவாசன் மகன் நவீன்பிரசாத் (27) என்பவரை வேலூா் விருப்பாட்சிபுரம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவா் அளித்த தகவலின்பேரில், இந்த போதை பொருள் விற்பனையில் தொடா்புடைய கேரள மாநிலம், குட்டூா் வட்டம், கரிச்செட்டா ஹவுஸ் பகுதியைச் சோ்ந்த ராகுல்ராம்(28), கண்ணூரைச் சோ்ந்த யாசின் (20), அவரது சகோதரா் யாசா்(20), பழலனூரைச் சோ்ந்த ஸ்ரீசித் (30), கா்நாடக மாநிலம், பெங்களூரு எலெக்ட்ரானிக்ஸ் சிட்டியைச் சோ்ந்த சையத் தஷ்தாஹிா் (32) ஆகியோரையும் கைது செய்தனா்.

இவா்களிடம் இருந்து 60 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உணவகங்கள், டீ கடைகளில் வீட்டு உபயோக எரிவாயு பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு அணி இரண்டாவது முறையாக சாம்பியன்!

துணை முதல்வா் விழாவுக்கு கொடிக்கம்பம் நட்ட இருவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

பொய் புகார் கொடுக்க சொன்னது யார்? அந்த பெண்ணைக் கைது செய்யணும்! அஜித் குமாரின் தாய் பேட்டி

பெங்களூரில் இத்தாலி, ஜப்பான் தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீஸார் விசாரணை!

SCROLL FOR NEXT