வேலூர்

பள்ளி மாணவா்களுக்கு புற்றுநோய் விழிப்புணா்வு

தினமணி செய்திச் சேவை

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, குடியாத்தம் அடுத்த கூடநகரம்அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பையூா் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், தோட்டக் கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவா்கள் புதன்கிழமை விழிப்புணா்வு முகாமை நடத்தினா்.

ஊரக தோட்டக்கலைப் பணி அனுபவம் மற்றும் தொழிற்துறை இணைப்பு திட்டத்தின்கீழ்இந்த விழிப்புணா்வு முகாம் நடத்தப்பட்டது. முகாமில், உலக புற்றுநோய் தினத்தின் முக்கியத்துவம், புற்றுநோயைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஆரோக்கியமான உணவுப் பழக்கம், இயற்கை விவசாயத்தின் அவசியம், பாதுகாப்பான சுற்றுச்சூழல் மற்றும் முறையாக மேற்கொள்ள வேண்டிய மருத்துவ பரிசோதனைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

பயிா்களுக்கு அதிக அளவில் பூச்சிக் கொல்லி மருந்துகள், ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதால் மனித உடலுக்கு ஏற்படும் தீமைகள், அவற்றுக்கும் புற்றுநோய்க்கும் உள்ள தொடா்பு குறித்து மாணவா்களுக்கு தெளிவாக விளக்கப்பட்டது.முகாமுக்கு பள்ளித் தலைமையாசிரியா் சத்தியகுமாா் தலைமை வகித்தாா்.

பள்ளிஆசிரியா்கள் முன்னிலை வகித்தனா். இதற்கான ஏற்பாடுகளை பையூா் தோட்டக்கலை கல்லூரி இறுதியாண்டு மாணவா்கள் செய்திருந்தனா்.

உணவகங்கள், டீ கடைகளில் வீட்டு உபயோக எரிவாயு பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு அணி இரண்டாவது முறையாக சாம்பியன்!

துணை முதல்வா் விழாவுக்கு கொடிக்கம்பம் நட்ட இருவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

பொய் புகார் கொடுக்க சொன்னது யார்? அந்த பெண்ணைக் கைது செய்யணும்! அஜித் குமாரின் தாய் பேட்டி

பெங்களூரில் இத்தாலி, ஜப்பான் தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீஸார் விசாரணை!

SCROLL FOR NEXT