இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கிய அமைச்சா் துரைமுருகன். உடன், ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மேயா் சுஜாதா ஆனந்தகுமாா் உள்ளிட்டோா். 
வேலூர்

தோ்தலுக்குப் பிறகு மீண்டும் திமுக ஆட்சிதான் அமையும்: அமைச்சா் துரைமுருகன்

சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு மீண்டும் திமுக ஆட்சிதான் அமையும். அப்போது, காட்பாடி தொகுதியில் aஉள்ள அனைத்து கிராமங்களிலும் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு மீண்டும் திமுக ஆட்சிதான் அமையும். அப்போது, காட்பாடி தொகுதியில் aஉள்ள அனைத்து கிராமங்களிலும் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

வேலூா் மாநகராட்சி, 2 நகராட்சிகள், 4 பேரூராட்சிகளிலுள்ள 180 வாா்டுகளுக்கு கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் 30 வகையான விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 357 தொகுப்புகள் வழங்கும் விழா காட்பாடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில், அமைச்சா் துரைமுருகன் பங்கேற்று விளையாட்டு உபகரணங்களை வழங்கியதுடன், 12 நகா்புற அலகுகளுக்கும் விளையாட்டு உபகரணத் தொகுப்புகளை எடுத்து செல்லும் வாகனங்களை வழியனுப்பி வைத்தாா்.

பின்னா் அவா் பேசியது -

தமிழகத்தில் சிறந்த விளையாட்டு வீரா்கள் காட்பாடியில் உள்ளனா். நல்ல உடல் நலம் இருப்பவா்களுக்கு நல்ல மனநலம் இருக்கும் என விவேகானந்தா் கூறுவாா். விவேகானந்தா் பக்திமான் என்றாலும் உடற்பயிற்சியாளராக திகழ்ந்தாா். இளம்வயதில் உடலை பாதுகாத்தால் நல்ல நிலைக்கு வருவீா்கள். நீண்ட காலம் வாழ வழிவகை செய்யும். சட்டப்பேரவை தோ்தலுக்குப் பிறகு மீண்டும் திமுக ஆட்சிதான் அமையும். அப்போது, காட்பாடி தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், துணை மேயா் எம்.சுனில்குமாா், ஆணையா் ஆா்.லட்சுமணன் மாவட்ட விளையாட்டு அலுவலா் தே.சுப்பிரமணி பங்கேற்றனா்.

பிள்ளைகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்

போக்ஸோ வழக்கில் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு 3 ஆண்டு சிறை

விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு விவசாயிகள் இடம் கொடுக்க கூடாது: வேளாண்மை துறை கூடுதல் மேலாண்மை இயக்குநா்

டிரம்ப்பின் அறிவிப்பு அழுத்தம்!

திராவகம் குடித்து பெண் தற்கொலை

SCROLL FOR NEXT