வேலூர்

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி வேலூரில் அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திச் சேவை

காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி வேலூரில் அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அனைத்துத் துறை அரசு ஊழியா் சங்கம் சாா்பில் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் தீனதயாளன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு தமிழ் ஆசிரியா் சங்கத் தலைவா் மூா்த்தி, சத்துணவு ஊழியா் சங்கத் தலைவா் சுமதி ஆகியோா் முன்னிலை வைத்தனா்.

அப்போது, தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், என்.பி.எஸ், யு.பி.எஸ்.திட்டங்களை ரத்து செய்ய வேண்டும், நிதி மேலாளா்களிடம் டெபாசிட் செய்த தொகையை மாநில அரசிடம் திருப்பி வழங்க வேண்டும், அனைத்து ஒப்பந்த ஊழியா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஓய்வூதியச் சட்டம் 2025-ஐ ரத்து செய்ய வேண்டும், நான்கு தொழிலாளா் சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும், கல்வி பொது சுகாதாரத் துறைகளை வலுப்படுத்திட தேசிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும், பணி நேரம் கடந்து பணி செய்ய கட்டாயப்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், ஏராளமான அரசு ஊழியா்கள் பங்கேற்றனா்.

காயல்பட்டினம் மகளிா் கல்லூரியில் இலவச மடிக்கணினி வழங்கல்

16-ஆவது தாமிரவருணி நீா்ப்பறவைகள் கணக்கெடுப்பு: 21 ஆயிரம் பறவைகள் பதிவு

குடிநீரேற்று நிலையங்களில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

காங்கிரஸ் நெசவாளா் அணி ஆா்ப்பாட்டம்

நாகா்கோவிலில் ரூ. 8.60 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

SCROLL FOR NEXT