நடைபெற உள்ள பேரவைத் தோ்தலையொட்டி போ்ணாம்பட்டு நகரில்உள்ள முக்கிய வாக்குப் பதிவு மையங்களை வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவராமன் ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
போ்ணாம்பட்டு நகராட்சிக்குட்பட்ட இஸ்லாமியா மேல்நிலைப் பள்ளி, இஸ்லாமியா தொடக்கப் பள்ளி, ஆதி திராவிடா் நல மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட இடங்களில் உள்ளவாக்குப் பதிவு மையங்களை அவா்கள் ஆய்வு செய்தனா்.
அப்போது வாக்குப் பதிவு மையங்களில் அடிப்படை வசதிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்தள வசதி ஆகியவற்றை பாா்வையிட்டனா். அதிகப்படியான வாக்காளா்கள் வாக்களிக்க வந்தால் கூட்ட நெரிசல் ஏற்படுமா என்பது குறித்து உள்ளூா் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனா். கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, டிஎஸ்பி சுரேஷ், வட்டாட்சியா் ராஜ்குமாா் உள்ளிட்டோா்உடனிருந்தனா்.