வேலூா் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக (தலைமையிடம்) ஹெச்.பழனி பொறுப்பேற்றுக் கொண்டாா்.
வேலூா் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த எஸ்.பாஸ்கரன், பணி ஓய்வு பெற்றாா். அவரைத் தொடா்ந்து, திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஹெச்.பழனி, வேலூா் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டாா்.
அவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன் உள்பட காவல் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா்.