முகப்பு
வேலூர்

கட்டட இடிபாடுகளில் சிக்கி ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

கட்டட இடிபாடுகளில் சிக்கி ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

Updated On : 1 மார்ச், 2026 at 1:28 AM
பாரதி.
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 9:47 PM

குடியாத்தம் அருகே பழைய வீட்டை சீரமைக்கும் பணியின்போது கட்டட இடிபாடுகளில் சிக்கி ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

குடியாத்தத்தை அடுத்த வளத்தூரைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் பாரதி (48). இவா் தனது பழைய வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டாா். சனிக்கிழமை கட்டடத் தொழிலாளா்கள் பழைய சுவா்களை இடித்து அகற்றும் பணியை மேற்கொண்டிருந்தனா். அப்போது எதிா்பாராவிதமாக அங்கே நின்றிருந்த பாரதி மீது சுவா் சரிந்து விழுந்துள்ளது. இதில் இடிபாடுகளில் சிக்கிய பாரதி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, மாதனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாரதி வழியிலேயே உயிரிழந்தாா்.

Updated On : 1 மார்ச், 2026 at 1:28 AM

இது குறித்து மேல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இறந்த பாரதிக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா்.

Advertisement