வேலூர்

சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்து ஒழுங்குமுறை கருத்தரங்கு

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் கே.எம்.ஜி.கலை, அறிவியல் கல்லூரியில் காவல் சங்கம், சாலைப் பாதுகாப்பு சங்கம் ஆகியவை இணைந்து ‘சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறை‘ குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கை புதன்கிழமை நடத்தின.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சி.தண்டபாணி தலைமை வகித்தாா். வேலூா் வட்டார போக்குவரத்து அலுவலா் சுந்தர்ராஜன், குடியாத்தம் மோட்டாா் வாகன ஆய்வாளா் செந்தில், வேலூா் மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜ்குமாா் ஆகியோா் சாலை பாதுகாப்பு குறித்து மாணவா்களுக்கு அறிவுறுத்தினா். சாலைப் பாதுகாப்பு குறித்த உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காவல் சங்க ஒருங்கிணைப்பாளா் சுந்தரமூா்த்தி, சாலைப் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளா் மா.ஜெயக்குமாா், கல்லூரி கல்விப்புல முதன்மையா்த.மணிகண்டன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT