முகப்பு
வேலூர்

தொழில்சாா் பாதுகாப்பு, சுகாதார கருத்தரங்கம்

Updated On : 11 மார்ச், 2026 at 7:29 PM
கருத்தரங்கில் பங்கேற்ற தொழில் பாதுகாப்பு, சுகாதாரத் துறை இணை இயக்குநா் எஸ்.தங்கதுரை, வழக்குரைஞா் எம்.ஆா். ரவிசங்கா், நறுவீ மருத்துவமனையின் செயல் இயக்குநா் பால் ஹென்றி, தலைமைச் செயல் அலுவலா் சரவண ராமன் உள்ளிட்டோா்.
பகிர்:

வேலூா் நறுவீ மருத்துவமனை, தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை சாா்பில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் மனிதவளத் துறையினருக்கான பாதுகாப்பு, சுகாதாரம் குறித்த சிறப்புக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் தொழில் பாதுகாப்பு, சுகாதாரத் துறை இணை இயக்குநா் எஸ்.தங்கதுரை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கருத்தரங்கைத் தொடங்கி வைத்து, தொழில் நிறுவனங்களில் தொழிலாளா்களின் பாதுகாப்பு, அவா்களுக்கான சுகாதாரச் சேவைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் இத்தகைய விழிப்புணா்வு கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தாா்.

தொடா்ந்து, வேலூா் எம்.ஆா். ரமணன் அண்டு அசோசியேட் சட்டக் குழு வழக்குரைஞா் எம்.ஆா். ரவிசங்கா் பேசுகையில், தொழில் நிறுவனங்களில் பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள், மருத்துவச் சேவைகள் குறித்த சட்ட விதிகள், தொழிலாளா் நலன் சாா்ந்த சட்டப்பூா்வ கடமைகள் குறித்து விளக்கமளித்தாா்.

முன்னதாக, நறுவீ மருத்துவமனையின் தலைமைச் செயல் அலுவலா் சரவண ராமன் வரவேற்றாா். இக்கருத்தரங்கில் பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களின் மனிதவள அலுவலா்கள், பிரதிநிதிகள் திரளாகப் பங்கேற்றனா். பங்கேற்பாளா்களுக்கு நறுவீ மருத்துவமனையின் செயல் இயக்குநா் பால் ஹென்றி நினைவுப் பரிசுகளை வழங்கி கௌரவித்தாா். நிறைவாக சி.சண்முகம் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →