இறுதிக்கட்ட உள்ளாட்சித் தேர்தல் பணி: பொள்ளாச்சியில் ஆட்சியர் திடீர் ஆய்வு
பொள்ளாச்சி அக். 16: பொள்ளாச்சி தாலுகா பகுதியில் உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு திங்கள்கிழமை (அக்.17) நடைபெறவுள்ளதையடுத்து வாக்கு சாவடிகளில், கோவை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் திடீர் ஆய்வு ம
பொள்ளாச்சி அக். 16: பொள்ளாச்சி தாலுகா பகுதியில் உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு திங்கள்கிழமை (அக்.17) நடைபெறவுள்ளதையடுத்து வாக்கு சாவடிகளில், கோவை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பொள்ளாச்சி நகராட்சிப் பகுதியில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள அழகாபுரி வீதி நகராட்சி பள்ளி, பாலகோபாலபுரம் வீதி நகராட்சி பள்ளி, சிக்கஞ் செட்டியார் நகர மன்றத் துவக்கப் பள்ளி ஆகிய சில வாக்குப்பதிவு மையங்களில் செய்யப்பட்டிருக்கும் பணிகள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் எண்ணிக்கை போன்றவற்றை ஆய்வு செய்தார்.
மேலும், ஜமீன் ஊத்துக்குளி, ஒடையகுளம், வேட்டைகாரன்புதூர், ஆனைமலை ஆகிய பேரூராட்சிகளின் வாக்கு எண்ணிக்கை மையமான, ஆனைமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செய்துள்ள ஏற்பாடுகளையும் ஆய்வு செய்தார். கோட்டூர் பேரூராட்சியில் உள்ள 22 வாக்குச் சாவடிகளுக்கு 70 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்ததால், 48 வாக்குப்பதிவு இயந்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு, மீதம் உள்ளவற்றை மற்ற பேரூராட்சிகளுக்கு பயன்படுத்துமாறு கூறினார்.
Advertisement
மேலும், உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக நடத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது, பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.