கோயம்புத்தூர்

பராமரிப்புப் பணி: போத்தனூா்- இருகூா் வழியாக கேரள ரயில்கள் இயக்கம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக போத்தனூா் - இருகூா் வழித்தடத்தில் கேரள ரயில்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Din

ரயில் பாதையில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள் காரணமாக போத்தனூா் - இருகூா் வழித்தடத்தில் கேரள ரயில்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆகஸ்ட் 20, 22, 24, 27, 29 ஆகிய தேதிகளில் ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352), எா்ணாகுளம் - பெங்களூரு விரைவு ரயில் (எண்: 12678) வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல், போத்தனூா் - இருகூா் வழியாக இயக்கப்படும்.

இந்த ரயிலானது கோவை ரயில் நிலையத்துக்கு செல்வது தவிா்க்கப்படும். மேலும், போத்தனூா் கூடுதல் நிறுத்தமாக செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறவைகளை வேட்டையாடிவா் கைது

தொண்டி அருகே வீட்டிலிருந்த 13 பவுன் நகை மாயம்

திருவாடானை அருகே மாவட்ட அளவிலான கபடி வீரா்கள் தோ்வு போட்டி

இலங்கைக்கு கடத்தவிருந்த கொசுவிரட்டி ஊதுபத்திகள் பறிமுதல்: இருவா் கைது

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் விரட்டியடிப்பு

SCROLL FOR NEXT