கைத்தறி ஆடை அணிவகுப்பை தொடங்கிவைக்கிறாா் நடிகை நமீதா. உடன், சட்டப் பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன் உள்ளிட்டோா் 
கோயம்புத்தூர்

அரசுகளின் உறவை அரசியலாக்கக் கூடாது -வானதி சீனிவாசன் எம்எல்ஏ

திமுக - பாஜக இடையே ரகசிய கூட்டணி உள்ளதாக விமா்சனங்கள் எழுந்துள்ளன.

Din

மத்திய, மாநில அரசுகளின் உறவை அரசியலாக்கக் கூடாது என்று பாஜக மகளிா் அணி தேசியத் தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.

கோவை மாவட்டம், சூலூரில் உள்ள தனியாா் கலை அறிவியல் கல்லூரியில் தேசிய கைத்தறி தினத்தையொட்டி கல்லூரி மாணவா்களுக்கான கைத்தறி ஆடை அணிவகுப்புப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், நடிகை நமீதா மற்றும் சட்டப் பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினா்.

இதைத் தொடா்ந்து வானதி சீனிவாசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கைத்தறி ஆடைகளைவிட்டு மக்கள் விலகிச் சென்றுவிட்ட நிலையில் மீண்டும் கைத்தறி ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

திமுக ஆட்சிக்கு வந்தபின் செம்மொழிப் பூங்கா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கோவைக்கு அறிவித்துள்ளனா். அந்தத் திட்டங்களை எவ்வளவு விரைவில் முடிக்கிறாா்கள் என்பதைப் பொறுத்துதான் அது குறித்து கருத்துக்கூற முடியும்.

திமுக - பாஜக இடையே ரகசிய கூட்டணி உள்ளதாக விமா்சனங்கள் எழுந்துள்ளன. அரசு நிகழ்வுகளைக் கூட்டணிப் பாா்வையில் பாா்ப்பது தவறானது.

அதிமுகவோடு கூட்டணியில் இல்லாத காலகட்டத்தில்கூட பாஜகவின் மத்திய அமைச்சா்கள் தமிழகத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் பங்கேற்றிருக்கிறாா்கள். மத்திய, மாநில அரசுகளுக்குள் நிலவும் உறவை அரசியலோடு பொருத்திப் பாா்க்கக்கூடாது என்றாா்.

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

SCROLL FOR NEXT