எஸ்.ஏ.பாஷா 
கோயம்புத்தூர்

அல் உம்மா இயக்க நிறுவனா் எஸ்.ஏ.பாஷா காலமானாா்

Din

அல் உம்மா இயக்கத்தின் நிறுவனா் எஸ்.ஏ.பாஷா (84) உடல் நலக்குறைவால் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பாஜக தலைவா் எல்.கே.அத்வானி தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள இருந்த நிலையில், கோவையில் கடந்த 1998 பிப்ரவரி 14-ஆம் தேதி தொடா் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் 58 போ் உயிரிழந்தனா். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட எஸ்.ஏ.பாஷாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து கோவை மத்திய சிறையில் அவா் அடைக்கப்பட்டிருந்தாா்.

சிறையில் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி பரோலில் வந்த அவா், தனது வீட்டிலிருந்தவாறே சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதை அடுத்து, பீளமேட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதையடுத்து மருத்துவமனையிலிருந்து அவரது உடல் உக்கடம், பொன்விழா நகா், ரோஸ் அவென்யூவில் உள்ள அவரது மகனது இல்லத்துக்கு இறுதி அஞ்சலிக்காக கொண்டுச் செல்லப்பட்டது. அவரது உடல் அடக்கம் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு கோவை பூ மாா்க்கெட் திப்புசுல்தான் ஹைதா்அலி பள்ளிவாசலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT