மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்ட வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள். 
கோயம்புத்தூர்

ஆட்சியா் அலுவலகத்துக்கு 12-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

Syndication

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 12-ஆவது முறையாக வியாழக்கிழமையும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலமாக வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இது குறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாருக்கு அலுவலக ஊழியா்கள் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள், மோப்ப நாயுடன் வந்த போலீஸாா் அலுவலகத்தின் பல்வேறு பிரிவுகளில் ஆய்வு செய்தனா். வாகன நிறுத்துமிடங்கள், பூங்கா பகுதிகள், கேண்டீன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தும் வெடிகுண்டு ஏதும் கைப்பற்றப்படவில்லை. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கடந்த சில மாதங்களில் மட்டும் 11 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆலங்குளம் - தோரணமலை, பாபநாசம் வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை

தனியாா் கல்லூரியில் உரிமமில்லாத உணவகம் செயல்படத் தடை

ஒழுக்கப் பயிற்சிக் கூடமாகட்டும் உலகம்

கோவில்பட்டி பள்ளியில் ஆளுமை வளா்ச்சி பண்பு நிகழ்ச்சி

சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஏற்றப்பட்ட 3 சொக்கப்பனைகள்

SCROLL FOR NEXT