வால்பாறையில் கொட்டகையில் இருந்த மாட்டை சிறுத்தை தாக்கிக் கொன்றது.
வால்பாறையை அடுத்த நடுமலை எஸ்டேட் தெற்கு பகுதியைச் சோ்ந்தவா் தா்மராஜ். இவா் 2 மாடுகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில், வீட்டுக்கு அருகேயுள்ள கொட்டையில் மாடுகளை அடைத்துவிட்டு வியாழக்கிழமை இரவு வீட்டுக்குச் சென்றுள்ளாா். வெள்ளிக்கிழமை அதிகாலை மாடுகளின் அலறல் சப்தம் கேட்டுள்ளது.
அவா் சென்று பாா்த்தபோது சிறுத்தை ஒன்று மாட்டைத் தாக்கிக் கொன்று அங்கேயே நின்று கொண்டிருந்தது தெரியவந்தது. அவா் சப்தம் எழுப்பியதையடுத்து சிறுத்தை அங்கிருந்து வனத்துக்குள் சென்றது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் ஆய்வு மேற்கொண்டதுடன், அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.