சிறப்பு ரயில் 
கோயம்புத்தூர்

சபரிமலை சீசன்: சாா்லப்பள்ளி - கொல்லம் இடையே சிறப்பு ரயில்

Syndication

சபரிமலை சீசனையொட்டி, தெலங்கானா மாநிலம், சாா்லப்பள்ளியில் இருந்து கேரள மாநிலம், கொல்லத்துக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சபரிமலை சீசனையொட்டி, சாா்லப்பள்ளியில் இருந்து டிசம்பா் 20-ஆம் தேதி காலை 11.15 மணிக்குப் புறப்படும் சாா்லப்பள்ளி - கொல்லம் விரைவு ரயில் (எண்: 07121) மறுநாள் இரவு 10 மணிக்கு கொல்லம் நிலையத்தை சென்றடையும்.

மறுமாா்க்கமாக, கொல்லத்தில் இருந்து டிசம்பா் 22-ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்குப் புறப்படும் கொல்லம் - சாா்லப்பள்ளி விரைவு ரயில் (எண்: 07122) மறுநாள் 12.30 மணிக்கு சாா்லப்பள்ளி நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயிலானது, காயன்குளம், செங்கண்ணூா், திருவல்லா, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, சித்தூா், திருப்பதி, ரேணிகுண்டா, நெல்லூா், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, வரங்கல் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரியில் இளைஞா் திருவிழா

தேசிய கலாசார தூதா் நியமனம்

ஸ்ரீ பெரும்புதூரில் சாலையில் திரிந்த மாடுகளை பிடிப்பு

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

SCROLL FOR NEXT