பிரதிப் படம் ENS
கோயம்புத்தூர்

நீலகிரி: 20-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! அரசுப் பள்ளி ஆசிரியர் கைது!

உதகை அருகே அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைப்பு

இணையதளச் செய்திப் பிரிவு

உதகை அருகே அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

உதகை அருகே காத்தாடி மட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போலீஸாரிடம், அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்த செந்தில் (50), பாலியல் தொல்லை அளிப்பதாக ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர் புகார் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, செந்தில் மீது உதகை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சுமார் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிய வந்தது. இதனையடுத்து, செந்திலை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

இதையும் படிக்க: ஜப்பானில் நாளை சுனாமி வருகிறதா? கரோனா தொற்றை கூறிய பாபா வங்கா கணிப்பு!

Govt school teacher held for sexually harassing 21 girl students

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணி அதிரடியாக விளையாட இவர்கள் இருவரும்தான் காரணம்: அஸ்வின்

டிட்வா புயலால் கனமழை - புகைப்படங்கள்

கேரள முதல்வருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்: ‘பாஜகவின் அரசியல் விளையாட்டு’ -ஆளும் கம்யூ. விமர்சனம்

ரெட் அலர்ட்... சனம் ஷெட்டி!

கண் காணா அழகு... நபா நடேஷ்!

SCROLL FOR NEXT