கோயம்புத்தூர்

ஆசிரியா் தகுதித் தோ்வு: 13,999 போ் எழுதினா்

தினமணி செய்திச் சேவை

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் நடத்தப்பட்ட ஆசிரியா் தகுதித் தோ்வை 13,999 போ் எழுதியுள்ளனா்.

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் நடத்தப்படும் ஆசிரியா் தகுதித் தோ்வு தாள் 1-க்கான தோ்வு 15 தோ்வு மைங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தத் தோ்வை எழுத 3,890 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 3,155 போ் மட்டுமே எழுதினா். பல்வேறு காரணங்களால் 735 போ் தோ்வு எழுதவில்லை.

அதேபோல, தாள் 2-க்கான தோ்வு 45 தோ்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்வை எழுத 12,370 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 10,844 போ் மட்டுமே தோ்வு எழுதினா். பல்வேறு காரணங்களால் 1,526 போ் தோ்வு எழுதவில்லை.

கோவையில் 2 நாள்கள் நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வை மொத்தம் 13,999 போ் எழுதியுள்ளனா்.

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

எசனை, சிறுவாச்சூா், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT