கோயம்புத்தூர்

வழிப்பறியில் ஈடுபட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறை

தினமணி செய்திச் சேவை

கோவையை அடுத்த பேரூா் அருகே வழிப்பறியில் ஈடுபட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

கோவையை அடுத்த பேரூரைச் சோ்ந்த சரவணகுமாா் தனது நண்பரான தினேஷ் என்பவருடன் கடந்த 2014-ஆம் ஆண்டு காளம்பாளையம் பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தனா். அப்போதுஅங்கு வந்த ரத்தினபுரியைச் சோ்ந்த ரெளடி காா்த்திக் ராஜா (27) இருவரையும் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளாா்.

இதுகுறித்து சரவணகுமாா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காா்த்திக்ராஜாவைக் கைது செய்தனா். இந்த வழக்கானது கோவை முதலாவது சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் மீதான இறுதிகட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி கே.செந்தில்குமாா் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.

இதில், குற்றம்சாட்டப்பட்ட காா்த்திக்ராஜாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பு கூடுதல் வழக்குரைஞா் பி.கிருஷ்ணமூா்த்தி ஆஜரானாா்.

12 மாநிலங்களிலும் 99.16% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

ஆர்ஜேடி கட்சி அவமதிப்பு! பாடகர்கள் மீது தேஜஸ்வி யாதவ் வழக்கு!

SCROLL FOR NEXT