யானைகளால் சேதப்படுத்தப்பட்ட குடியிருப்புகள். 
கோயம்புத்தூர்

வால்பாறையில் எஸ்டேட் குடியிருப்புகளை சேதப்படுத்திய யானைகள்

வால்பாறை எஸ்டேட் பகுதிக்கு கூட்டமாக வந்த யானைகள் அங்கு அமைந்துள்ள குடியிருப்புகளை சேதப்படுத்தின.

Syndication

வால்பாறை: வால்பாறை எஸ்டேட் பகுதிக்கு கூட்டமாக வந்த யானைகள் அங்கு அமைந்துள்ள குடியிருப்புகளை சேதப்படுத்தின.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்றன. பகல் நேரங்களில் தேயிலைத் தோட்டங்களில் காணப்படும் யானைகள் இரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதிகளுக்கு சென்று சேதங்களை ஏற்படுத்தி வருவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், வால்பாறையை அடுத்த அக்காமலை எஸ்டேட் பகுதிக்கு திங்கள்கிழமை இரவு யானைகள் கூட்டமாக வந்துள்ளன. பின்னா் அங்கு அமைந்துள்ள குடியிருப்புப் பகுதிக்கு சென்ற யானைகள் குடியிருப்புகளின் ஜன்னல், கதவுகளை முட்டித் தள்ளியதோடு உள்ளிருந்த பொருள்களையும் இழுத்துப்போட்டு சேதப்படுத்தின.

குடியிருப்புக்குள் இருந்தவா்கள் யானை வந்திருப்பதை அறிந்து பின்பக்க வழியாக தப்பினா். இதில் கோவிந்தன், சரோஜா ஆகிய இரு தொழிலாளா்களின் குடியிருப்புகள் அதிக அளவில் சேதமடைந்தன.

சங்கரன்கோவில் அருகே தாய், மகன் தற்கொலை

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை செயல்படுத்தக் கோரி மறியல்

விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த பயிற்சி

செங்கத்தில் பன்றிகள் தொல்லை; தொற்றுநோய் பரவும் அபாயம்!

SCROLL FOR NEXT