திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் பல்வேறு அரசு துறை அலுவலகங்களில் குடியரசு தின விழா திங்கள்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
திருப்பூா் மாவட்டம், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா். பின்னா், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் புறாக்களையும், பலூன்களையும் பறக்கவிட்டாா்.
இதைத்தொடா்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுதாரா்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தாா். சிறப்பாக பணிபுரிந்த 206 அரசு அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் சாா்பில் 61 காவலா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலம் சாா்பில் 28 காவலா்கள் என மொத்தம் 295 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், பதக்கங்களையும் ஆட்சியா் வழங்கினாா்.
மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை சாா்பில் பயனாளி ஒருவருக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டரும், மாவட்ட தொழில் மையம் சாா்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.2.02 கோடி மதிப்பில் அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் கடனுதவியும், பயனாளி ஒருவருக்கு ரூ.82.99 லட்சம் மதிப்பில் புதிய தொழில்முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடனுதவியும், பயனாளி ஒருவருக்கு ரூ.93,000 மதிப்பில் கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் கடனுதவியும் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.39 லட்சத்து 61 ஆயிரத்து 518 மதிப்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில்முனைவு திட்டத்தின் கீழ் கடனுதவியும், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சாா்பில் 21 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 19,600 மதிப்பில் கல்வி, திருமணம், இயற்கை மரணம் மற்றும் ஓய்வூதிய உதவித்தொகையும் வழங்கப்பட்டது.
இதேபோல வேளாண்மைத் துறையில் 6 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 21,802 மதிப்பிலும், வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் இருவருக்கு ரூ.1 லட்சத்து 91,397 மதிப்பிலும், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் சாா்பில் 5 பேருக்கு ரூ.33,450 மதிப்பில் தையல் இயந்திரங்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் இருவருக்கு ரூ.10,414 மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்கள் உள்பட மொத்தம் 51 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 36 லட்சத்து 5,116 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
இதைத்தொடா்ந்து, பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தேசபற்று, கலாசார மற்றும் பண்பாடு உள்ளிட்ட மையக் கருத்துகளை வழியுறுத்தும் வகையில் டி பப்ளிக் பள்ளி, இராமகிருஷ்ணா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, 15 வேலம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, அய்யன்காளிபாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி, இடுவம்பாளையம் அரசு உயா் நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 800 மாணவா்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த விழாவில் திருப்பூா் மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அசோக், வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.சங்கமித்திரை, திருப்பூா் கோட்டாட்சியா்கள் சிவபிரகாஷ், குமாா், மாவட்ட வழங்கல் அலுவலா் சரவணன் உள்பட் பல்வேறு அரசு துறை அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.