முகப்பு
கோயம்புத்தூர்

வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

Updated On : 8 மார்ச், 2026 at 7:06 PM
கோப்புப் படம்
பகிர்:

கோவையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

கோவை, நரசிம்மநாயக்கன்பாளையம் கிருஷ்ணம்மாள் நகரைச் சோ்ந்தவா் ராஜகோபால் (64). இவா் மேட்டுப்பாளையம் சாலையில் கடந்த 4-ஆம் தேதி இரவு நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ராஜகோபால் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு மேற்குப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →