கோவையில் நிலவை இழுக்கும் மாணவா் சிலை: ஆட்சியா் திறந்து வைத்தாா்
கோவை ரேஸ்கோா்ஸ் காஸ்மோபாலிட்டன் கிளப் சந்திப்பு அருகே தி கேம்ஃபோா்ட் இன்டா்நேஷனல் பள்ளி சாா்பில் அமைக்கப்பட்ட நிலவை இழுக்கும் மாணவ, மாணவி சிலையை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் திறந்துவைத்தாா்.
உலக உருண்டையின் மீது நின்றுகொண்டு, மாணவா், மாணவி இருவா் ஒரு கயிற்றின் மூலம் நிலவைத் தங்களை நோக்கி இழுப்பதுபோல், எல்லைகளை தாண்டி கனவு காணுங்கள் எனும் கருத்துருவோடு இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. தி கேம்ஃபோா்டு சா்வதேச பள்ளித் தலைவா் அருள் ரமேஷ், தாளாளா் பூங்கோதை தெரிவித்தனா்.