கோயம்புத்தூர்

469 மதிப்பெண்கள் பெற்ற மாற்றுத் திறனாளி மாணவர்

DIN

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தில்  உள்ள ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பார்வையற்ற  மாற்றுத் திறனாளி மாணவர் சபரிகுமரன், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
 இந்த மாணவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம்: தமிழில் 94, ஆங்கிலத்தில் 95, கணிதத்தில் 98, அறிவியலில் 86,சமூக அறிவியலில் 96.  இப்பள்ளியில் தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.ஜி.லலித்குமார், ஆர்.உதயா ஆகியோர் தலா 489 மதிப்பெண்களும், எஸ்.கற்பககணேசன் 488 மதிப்பெண்களும், வி.இமயவரம்பன் 483 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். 4 பேர் அறிவியலிலும், 13 பேர் சமூக அறிவியலிலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இவர்களை பள்ளிச் செயலர் சுவாமி தத்பிரபானந்தர், தலைமை ஆசிரியர் வீரகுமார், ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT