முகப்பு
கோயம்புத்தூர்

பள்ளி மாணவர்களுக்கான விஞ்ஞான அறிவியல் செயல் விளக்க முகாம்

கோவையில் புரொபெல் நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான விஞ்ஞான அறிவியல் செயல் விளக்க முகாம் மே 5 ஆம் தேதி நடைபெறுகிறது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

கோவையில் புரொபெல் நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான விஞ்ஞான அறிவியல் செயல் விளக்க முகாம் மே 5 ஆம் தேதி நடைபெறுகிறது.
பள்ளி மாணவர்களின் அறிவியல் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு போதி மரம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் இளம் மாணவர்களுக்கு விஞ்ஞான அறிவை மேம்படுத்துவதற்காக விஞ்ஞான அறிவியல் செயல் விளக்க முகாம் வரும் மே 5- ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து அமைப்பின் நிறுவனர் வித்யா செந்தில்குமார்,  ஏ.வி. குரூப்ஸ் நிறுவனத் தலைவர் ஏ.வி.வரதராஜன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பள்ளி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பில் ஆர்வமாக உள்ளனர். அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாமல் இருப்பதை உணர்ந்து போதிமரம்  என்னும் அமைப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில்,  இந்த ஆண்டு நடைபெறும் முகாமில் கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 8 வயது முதல் 17 வயது வரையில் இளம் மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த முகாமில் கலந்து கொள்ளும்  மாணவர்களுக்கு விஞ்ஞான அறிவு வளர்ச்சிக்கான அறிவியல் பெட்டகம் வழங்கப்படுகிறது. இதில் கலந்து கொள்ள W​W​W.​L​M​E​S.​C​OM என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →