கோயம்புத்தூர்

அரசியல் கட்சிகள் சார்பில் சுதந்திர தினம் கொண்டாட்டம்

DIN

சுதந்திர தினத்தையொட்டி கோவையில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
 கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாநகர் மாவட்டத் தலைவர் மயூரா ஜெயக்குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 
இதில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வீனஸ் மணி, நிர்வாகிகள் கணபதி சிவகுமார், சௌந்தரகுமார், இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் குமரேசன், மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அத் தொகுதி உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். 
அதில், மாநகராட்சி மத்திய மண்டல முன்னாள் தலைவர் ஆதிநாராயணன், காட்டூர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோவை வி.கே.கே.மேனன் சாலையில் பாஜக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசிய கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றினார். இதில் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், கோட்டப் பொறுப்பாளர் ஜி.கே.செல்வகுமார், மாநகர் மாவட்டத் தலைவர் சி.ஆர்.நந்தகுமார், மாவட்டப் பொதுச் செயலாளர் ரமேஷ், இளைஞரணி மாவட்டத் தலைவர் சுதாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான ஜீவா இல்லத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்டச் செயலாளர் வி.எஸ்.சுந்தரம் தேசியக் கொடியை ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் கட்சியின் மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம், மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் ஆர்.ஏ.கோவிந்தராஜன், மாவட்ட துணை செயலாளர் ஆர்.தேவராஜ், மாவட்ட பொருளாளர் யு.கே.சுப்பரமணியன், தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டட கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் என்.செல்வராஜ், கோயம்புத்தூர் லேபர் யூனியன் மாவட்டப் பொதுச் செயலாளர் ஆர்.பாலகிருஷ்ணன், அமைப்புசாரத் தொழிலாளர் சங்க மாவட்ட பொதுசெயலாளர்  சி.தங்கவேல், டெம்போ டாக்ஸி ஆட்டோ தொழிலாளர் சங்கத் தலைவர் என்.கணேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
இதேபோல் கோவையில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT