கோவில்பாளையம் அருகே அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட தனியார் ஆலை உழியர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவில்பாளையம் அருகே உள்ள வையம்பாளையத்தில் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20 நாள்களாக ஆலை முன்பு பந்தல் அமைத்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாணிக்கவாசம் (40), முரளிதரன் (42), முருகன் (46), ஜெகதீஸ்குமார் (48), பாலமுருகன் (43), தேவராஜ் (43) உள்ளிட்டோர் வழக்கம்போல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து அங்கு வந்த போலீஸார்அனுமதியின்றி பேராட்டத்தில் ஈடுபடுவதாகக் கூறி ள் 6 பேரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.