முகப்பு
கோயம்புத்தூர்

மனைவியைக் கொன்றவர் போலீஸில் சரண்

பொள்ளாச்சி அருகே மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த தொழிலாளி போலீஸில் சரணடைந்தார்.

Updated On : 9 ஜூலை, 2018 at 7:18 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

பொள்ளாச்சி அருகே மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த தொழிலாளி போலீஸில் சரணடைந்தார்.
பொள்ளாச்சியை அடுத்துள்ள பூவலப்பருத்தியைச் சேர்ந்தவர் சரவணன்(27). கூலித் தொழிலாளியான இவர் சுதா என்ற பெண்ணை கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் அஜய்பிரசாத் என்ற ஆண் குழந்தை உள்ளது. 
இந்நிலையில்,  மனைவியின் நடத்தையில் சரவணனுக்கு சந்தேகம் ஏற்பட்டதாம். இது தொடர்பாக அவர்களுக்குள் பிரச்னை இருந்து வந்துள்ளது.
 ஞாயிற்றுக்கிழமை மாலை பூவலப்பருத்தி அருகே உள்ள ஆற்றுக்கு மனைவியை அழைத்துச் சென்ற சரவணன் அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்தாராம். பின்னர், ஆழியாறு போலீஸில் சரணடைந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.