முகப்பு
கோயம்புத்தூர்

ராசிபுரத்தில் கடவுச்சீட்டு சேவை மையம் மே 18 இல் தொடக்கம்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் கடவுச்சீட்டு சேவை மையம் (பாஸ்போர்ட் கேந்திரா) மே 18-ஆம் தேதி தொடங்கப்படுகிறது.

Updated On : 15 மே, 2018 at 1:09 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் கடவுச்சீட்டு சேவை மையம் (பாஸ்போர்ட் கேந்திரா) மே 18-ஆம் தேதி தொடங்கப்படுகிறது.
கோவை மண்டல கடவுச்சீட்டு மையத்துக்கு உள்பட்டு இருந்த நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக கடவுச்சீட்டு சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் மே 18-ஆம் தேதி முதல் செயல்பட உள்ளது. எனவே, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் கடவுச்சீட்டு பெற இச்சேவை மையத்தை அணுகலாம்.
கடவுச்சீட்டு பெற ராசிபுரம் தபால் அலுவலகத்தில் முன் அனுமதி பெறலாம். புதிய கடவுச்சீட்டுகள் மற்றும் மறு விநியோக கடவுச்சீட்டுகள் மட்டுமே வழங்கப்படும். தத்கல் முறையில் விண்ணப்பிக்கப்படும் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
ராசிபுரத்தில் தொடங்கப்பட உள்ள சேவை மையத்தில் நாள்தோறும் 50 விண்ணப்பங்கள் ஏற்கப்படும். இது, தமிழகத்தில் 10-ஆவது கடவுச்சீட்டு மையம் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.