பெண்ணிடம் 3 பவுன் நகைப் பறிப்பு
கோவையை அடுத்த குனியமுத்தூரில் முகவரி கேட்பது போல நடித்து பெண்ணிடம் 3 பவுன் நகையை மர்ம நபர்கள் சனிக்கிழமை பறித்துச் சென்றனர்.
கோவையை அடுத்த குனியமுத்தூரில் முகவரி கேட்பது போல நடித்து பெண்ணிடம் 3 பவுன் நகையை மர்ம நபர்கள் சனிக்கிழமை பறித்துச் சென்றனர்.
கோவை, இடையர்பாளையம் கே.கே.நகரைச் சேர்ந்தவர் மாதவன். இவரது மனைவி சாவித்திரி (55). இவர், அதே பகுதியில் உள்ள மளிகைக்கடைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் சாவித்திரியிடம் முகவரி கேட்பதுபோல அருகில் வந்து அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து குனியமுத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.