அன்னூர் அருகே வீட்டில் பீரோவை உடைத்து 2 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
அன்னூர் அருகே உள்ள கஞ்சப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன் (52). இவர், மனைவியுடன் உறவினர் திருமணத்துக்கு செப்டம்பர் 22ஆம் தேதி சென்றுள்ளார். மீண்டும் 23ஆம் தேதி காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்துள்ளது.
மேலும், வீட்டினுள் சென்று பார்த்தபோது வீட்டில் வைக்கப்பட்டிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, ஜான்சன் அளித்த புகாரின் பேரில் அன்னூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.