கோயம்புத்தூர்

மரத்தில் கார் மோதி விபத்து: தம்பதி உயிரிழப்பு

DIN

கோவை அருகே மரத்தில் கார் மோதியதில் கணவர், மனைவி உயிரிழந்தனர்.
 கோவை, தடாகம் அருகே உள்ள சோமையனூர், வி.கே.வி நகரைச் சேர்ந்தவர் வீரபத்திரன் (58). பூ மார்க்கெட் பகுதியில் எலக்ட்ரிகல் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி புஷ்பா (52). இவர்களது மகன் பிரபாகரன் (35). 
 வீரபத்திரன் தனது மனைவியுடன் ரயில் நிலையம் அருகே உள்ள உறவினர் வீட்டு விசேஷத்தில் பங்கேற்றார். பின்னர் பிரபாகரன் தனது பெற்றோரை சோமையனூருக்கு காரில் சனிக்கிழமை இரவு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். காரை பிரபாகரன் ஓட்டினார்.
 இவர்களது கார் கோவை-ஆனைகட்டி சாலையில் உள்ள கணுவாய் அருகே சென்றபோது திடீரென நாய் ஒன்று குறுக்கே வந்ததாகக் கூறப்படுகிறது. நாய் மீது மோதாமல் இருக்க முயற்சித்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் வீரபத்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிரபாகரனும், புஷ்பாவும் பலத்த காயமடைந்தனர்.
 அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி புஷ்பா சனிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார். பிரபாகரன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக தடாகம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT