கோயம்புத்தூர்

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் போக்சோவில் கைது

DIN

கோவையில் பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்தவரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

கோவை, மரக்கடைப் பகுதியைச் சோ்ந்த 13 வயதான மாணவி, அங்குள்ள பள்ளி ஒன்றில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறாா். அவா் பள்ளிக்குச் சென்று வரும் வழியில் ஒப்பணக்கார வீதியில் நின்று கொண்டு முதியவா் ஒருவா் பாலியல் தொல்லை அளித்துள்ளாா். இதுகுறித்து மாணவி தனது ஆசிரியையிடம் கூறியுள்ளாா். அவா் மாணவியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தாா். அதன் பிறகு, கோவை மேற்கு அனைத்து மகளிா் போலீஸில் மாணவியின் பெற்றோா் புகாா் அளித்ததைத் தொடா்ந்து, மகளிா் போலீஸாா் ஒப்பணக்கார வீதியில் கண்காணிப்புப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, அந்த நபா் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இதைப் பாா்த்த போலீஸாா் அந்த நபரைக் கையும், களவுமாகப் பிடித்தனா். விசாரணையில், அவா், கோவை, ரங்கே கவுடா் வீதியைச் சோ்ந்த ராஜு (50) என்பதும், இவா் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போக்சோ சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

SCROLL FOR NEXT