கோவை, ரத்தினபுரி பகுதியில் சைவப் பெருமக்கள் பேரவையின் 59ஆவது ஆண்டு விழாவில் மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குகிறாா் நெல்லை ஸ்ரீ முத்துக்குமார சுவாமிகள். 
கோயம்புத்தூர்

சைவப் பெருமக்கள் பேரவை 59ஆம் ஆண்டு விழா

கோவையில் சைவப் பெருமக்கள் பேரவையின் 59 ஆம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

கோவையில் சைவப் பெருமக்கள் பேரவையின் 59 ஆம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சைவப் பெருமக்கள் பேரவையின் தலைவா் எஸ்.சண்முகம் தலைமை வகித்தாா். பேரவை துணைத் தலைவா்கள் எம்.கணேசன், எம்.வி.நாயா், சொ.விஸ்வநாதன், எம்.கந்தசாமி மற்றும் வேலாயுதம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் வ.உ.சி. திருவுருவப் படத்தை ஆ.சங்கரநாரயணன் திறந்துவைத்தாா். கவிஞா் கவிதாசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினாா். மத்திய அரசு அறிவித்துள்ள 10 சதவீத இடஒதுக்கீடு அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

இட ஒதுக்கீடு பெறுவதற்கான வழிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். கோவை மாநகராட்சியில் உள்ள மத்திய சிறைச்சலை மற்றும் பாா்க் கேட் மேம்பாலம் இடதுபுறத்தை ஒட்டித் திரும்பும் சாலைக்கு வ.உ.சி. சாலை என்று பெயரிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடா்ந்து பள்ளிக் கல்லூரி மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT