கோயம்புத்தூர்

பேருந்தில் கஞ்சா கடத்திய முதியவர் கைது

DIN


தேனியிலிருந்து பேருந்தில் இரண்டரை கிலோ கஞ்சா கடத்தி வந்த முதியவரை கோவை சரக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
தேனியில் இருந்து கோவை வரும் ஒரு பேருந்தில் கஞ்சா கடத்தப்படுவதாக கோவை சரக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேனி மாவட்டத்தில் இருந்து கோவை வந்த பேருந்தில் இறங்கிய நபர் ஒருவர் சந்தேகத்துக்குரிய வகையில் பேருந்து நிலையத்தில் சுற்றி வருவதைப் பார்த்தனர். இதையடுத்து போலீஸார் அவரைப் பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணானத் தகவல்களைத் தெரிவித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் அவரது கைப்பையை சோதனையிட்டனர். அதில், இரண்டரைக் கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர். விசாரணையில் பிடிபட்டவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் (57) என்பது தெரியவந்தது. மேலும், கோவை இடையர்பாளையத்தில் வாடகை வீடு எடுத்து தங்கியுள்ள அவர், அங்கிருந்து பலருக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அதையடுத்து செல்வராஜை போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT