கோயம்புத்தூர்

புதிய கட்டடத்துக்கு மாறிய  தனலட்சுமி வங்கியின் பொள்ளாச்சி கிளை

DIN

தனலட்சுமி வங்கியின் பொள்ளாச்சி கிளை புதிய கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தனலட்சுமி  வங்கி பொள்ளாச்சி கிளை அலுவலகம் பொள்ளாச்சி வெங்கடேசா காலனி ரத்தின விநாயகர் கோயில் தெருவில் உள்ள எஸ்ஆர்டி பிளாசா என்ற முகவரியில் உள்ள புதிய கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. வங்கியை புதிய கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யும் விழாவும், வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. பொள்ளாச்சி கிளையின் புதிய கட்டடத்தை சுவாமி சுனில் தாஸ் திறந்து வைத்தார். 
வங்கி முதன்மை பொதுமேலாளர் பி.மணிகண்டன், மண்டல மேலாளர் சன்னி ஜார்ஜ் தலைமை வகித்தனர். வங்கியின் பாதுகாப்பு பெட்டக அறையை மருத்துவர் பி.உத்தரராஜ் திறந்து வைத்தார். ஏடிஎம் அறையை கல்வியாளர் பி.அப்புக்குட்டி திறந்து வைத்தார்.  இதைத்தொடர்ந்து வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல கடன் வசூல் மேலாளர் ஆண்டனி இருதயராஜா தலைமை வகித்தார். பொள்ளாச்சி கிளை மேலாளர் முகம்மது அஷ்ரப் அலி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

SCROLL FOR NEXT